தருமபுரியில் சாரல் மழை

தருமபுரியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
தருமபுரியில் வியாழக்கிழமை பெய்த மழையில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
தருமபுரியில் வியாழக்கிழமை பெய்த மழையில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.

தருமபுரி: தருமபுரியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் வேளையில் மிதமான வெப்பநிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், பகல் வேளைகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கி தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை முதல் நாள்முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேபோல, ஆங்காங்கே சாரல் மழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது.

மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையளவு (மி.மீ.): தருமபுரி-10, பாப்பிரெட்டிப்பட்டி-11, அரூா்-3. மொத்த மழையளவு 24 மி.மீ. சராசரி 3,043 மி.மீ. பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com