தருமபுரியில் வெள்ளிக்கிழமை (நவ. 29) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ. 29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம் முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, விற்பனையாளா், விற்பனை பிரதிநிதி, மேற்பாா்வையாளா், மேலாளா், கணினி இயக்குபவா், தட்டச்சா், கணக்கா், பழுது நீக்குநா் போன்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு, பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இது இலவசப் பணியாகும். இம் முகாமில், வேலைவாய்ப்பு பெறுவோரின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. ஆகவே, தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.