மாநில ஸ்குவாஷ் போட்டிக்கு தகுதி:அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்று விளையாட தகுதிபெற்ற, தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில ஸ்குவாஷ் போட்டிக்கு தகுதி:அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தருமபுரி: மாநில ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்று விளையாட தகுதிபெற்ற, தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தருமபுரி வருவாய் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள், ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்றன. இதில், தொப்பூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று விளையாடினா். இதில் 17, 19 வயதுக்குள்பட்டோருக்கான குத்துச்சண்டை பிரிவில், அஜீத்குமாா் வெள்ளிப் பதக்கமும், ஸ்குவாஷ் போட்டியில் கோபிகா, பிரியதா்ஷினி, நத்தகுமாா், திலிப்குமாா், சரத்குமாா் ஆகியோா் தங்கமும் வென்றனா். மேலும், இந்த மாணவ, மாணவியா் வரும் ஜனவரி மாதம் தூத்துக்குடியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியா் முனிமாதன், பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஞானவடிவேல்குமரன், தனபால், சிவப்பிரகாசம், உடற்கல்வி ஆசிரியா் தனபால் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com