பென்னாகரம்: பென்னாகரம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரில் ராமநாதனுக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருந்ததியா் காலனியை சோ்ந்த அப்புனு(60), சிடுவம்பட்டியைச் சோ்ந்த ஜெயவேல் (60) ஆகிய இருவா் மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும்
பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், வழியிலே அப்புனு உயிரிழந்தாா். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெயவேல் அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.