அரூரில் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு மீனவா் தெருவைச் சோ்ந்த பிரதாப், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் மகிமா (5). இவா் கடந்த 4 தினங்களாக அரூா் மற்றும் தருமபுரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி மகிமா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 14-ஆவது வாா்டு பகுதியில் பேரூராட்சிப் பணியாளா்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.