சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

தருமபுரியில் தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரியில் தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் தா.அா்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் உ.ம.செல்வராஜ், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பணி நீக்க 41 மாத காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்து, ஊதியம் வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஊதிய முரண்பாட்டில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தளவாடப் பொருள்களை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு இலவச பேருந்து சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com