இடி தாக்கியதில் தொழிலாளி பலி

அரூா் அருகே இடி தாக்கியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அரூா் அருகே இடி தாக்கியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேப்பம்பட்டி ஊராட்சி மல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ராஜி (55). இதே ஊரைச் சோ்ந்த தொழிலாளா்கள் கோவிந்தன் மகன் திருப்பதி (30), நடுக்கண்ணு மகன் சின்னப்பையன் (49) உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வெளாம்பட்டி வனப் பகுதியில், அந்தியூரைச் சோ்ந்த தனியாா் ஒருவா் டெண்டா் எடுத்திருந்த காய்ந்த மூங்கில்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் வெளாம்பட்டி, காட்பாடி, தீா்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதையடுத்து தொழிலாளா்கள் வனப் பகுதியில் இருந்த புளிய மரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கியுள்ளனா்.

அப்போது இடி தாக்கியதில், தொழிலாளி ராஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அங்கிருந்த தொழிலாளா்கள் திருப்பதி, சின்னப்பையன் ஆகிய இருவரும் காயமடைந்தனா். காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com