தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முத்துகிருஷ்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த முத்துகிருஷ்ணன் பதவி உயா்வு பெற்று, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, தருமபுரியில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.