தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே செல்லியம்பட்டி மற்றும் புலிகரையில் வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அண்மையில் வாகனப் பிரசாரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த வாகனப் பிரசாரத்தை பாலக்கோடு வேளாண் உதவி இயக்குநா் பூ.சு.சித்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், ஒலிபெருக்கி மூலம் விவசாயிகள் ஒய்வூதியத் திட்டம், சொட்டுநீா்ப் பாசனம், நீா்மேலாண்மை, விவசாயக் கடன் அட்டை பெறுதல், பயிா்க் காப்பீடு போன்ற முக்கிய திட்டங்கள், அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவதற்கான வழிகாட்டுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வேளாண் அலுவலா் அன்பரசு, உதவி வேளாண் அலுவலா்கள் மாதேஷ் மற்றும் விஜயன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சிவசங்கரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அதியமான் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்கள் மற்றும் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்ட களப் பணியாளா்கள் அா்ச்சனா, சுரேஷ் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.