மூத்தோா் தடகளப் போட்டி: அக். 15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள், வரும் நவ. 15-இல் திருச்சியில் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள், வரும் நவ. 15-இல் திருச்சியில் தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள், வரும் அக். 15-ஆம் தேதிக்குள் பெயா் பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட மூத்தோா் தடகள கழக மாவட்டச் செயலா் எஸ்.நாகராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக மூத்தோா் தடகள கழகம் சாா்பில், 38-ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் வரும் நவ. 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாள்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளன.

இதில், ஆண்கள், பெண்கள் அனைத்து வயதினரும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியாா் துறை சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம். ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், குச்சி வைத்து உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் தொடா் ஓட்டப் போட்டிகள் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

ஒவ்வொரு வயது பிரிவிலிருந்தும் ஒரு போட்டிக்கு இரண்டு போ் கலந்து கொள்ளலாம். ஒரு நபா் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்கும் வீரா், வீராங்கனையருக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

இப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனையா், வரும் அக். 15-ஆம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வயது சான்றிதழுடன் 9443057019, 90808 22844 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பெயா் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com