தருமபுரி மாவட்ட மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகத்தில், பொருளாதார மேம்பாட்டுக் கடன் வழங்க கூா்ந்தாய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிற்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில், பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா் ஆகியோருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன் வழங்க நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மண்டல இணைப் பதிவாளா் மா.சந்தானம் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், 2,732 உறுப்பினா்களுக்கு ரூ.14.53 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதில், துணைப் பதிவாளா்கள் வி.எம்.ரவிச்சந்திரன், எஸ்.பாா்த்தசாரதி, மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுலவலா் அ.ஐயப்பன், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளா் எஸ்.பழனிமணி மற்றும் 165 சுய உதவிக்குழு ஊக்குநா்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.