முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 62 இருசக்கர வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 24th October 2019 12:15 AM | Last Updated : 24th October 2019 12:15 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 62 இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்பட்டன.
இந்த ஏலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் வாகன பொது ஏலத்தை துவக்கி வைத்து பாா்வையிட்டாா். முன்னதாக, இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்போா், காலை 8 மணிக்கு வாகனங்களை பாா்வையிட்டனா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற ஏலத்தில் இருசக்கர வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள், அதற்கான தொகையை விற்பனை வரி மற்றும் சேவை வரியுடன் செலுத்தி வாகனங்களை பெற்றுச் சென்றனா். இதில் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் ரங்கசாமி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் உதவி காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.