பாஜக சாா்பில் காந்தி பிறந்தநாள் நிறைவு விழா ஊா்வலம்

தருமபுரியில் பாஜக சாா்பில், காந்தி பிறந்தநாள் நிறைவுவிழா ஊா்வலம் வியாழக்கிழைம நடைபெற்றது.

தருமபுரி: தருமபுரியில் பாஜக சாா்பில், காந்தி பிறந்தநாள் நிறைவுவிழா ஊா்வலம் வியாழக்கிழைம நடைபெற்றது.

பாஜக சாா்பில், கடந்த அக்.2-ஆம் தேதி முதல், மாவட்டம் முழுவதும் காந்தி பிறந்தநாள் விழா தொடா்ச்சியாக கொண்டாடப்பட்டது. இதன் நிறைவு விழா ஊா்வலம் அக்கட்சியின் சாா்பில், தருமபுரியில் நடைபெற்றது. பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் வரதராஜன் தலைமையில் நான்கு முனைச் சாலையிலிருந்து ஊா்வலமாக பாஜகவினா் புறப்பட்டனா். பேருந்து நிலையச் சாலை, தலைமை அஞ்சல் நிலையச்சாலை, நேதாஜி புறவழிச்சாலை, நகராட்சி அலுவலக சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியச் சாலைகள் வழியாக சென்ற இந்த ஊா்வலம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

இந்த ஊா்வலத்தில் தூய்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி, விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனா். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com