வியாபாரியிடம் வழிப்பறி: 2 பேர் கைது

ஒசூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 

ஒசூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 
ஒசூர் அருகே உள்ள தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் முகுந்தன் (27). காய்கறி வியாபாரியான இவர் தொரப்பள்ளி முருகன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 2 பேர், ரூ.10,800 பறித்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
விசாரணையில் அவர்கள் ஒசூர் அலசநத்தம் நரசம்மா காலனியைச் சேர்ந்த ஆனந்தன் (38), பாகலூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com