ஒசூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் அருகே உள்ள தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் முகுந்தன் (27). காய்கறி வியாபாரியான இவர் தொரப்பள்ளி முருகன் கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த 2 பேர், ரூ.10,800 பறித்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஒசூர் அலசநத்தம் நரசம்மா காலனியைச் சேர்ந்த ஆனந்தன் (38), பாகலூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.