உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தருமபுரியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் முடிவின்படி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் நீதிமன்ற வழக்குரைஞர்கள் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தங்களது நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.