ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் பெ.ஜெயராமன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் கு.அரவிந், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலக குழுவினர் சிறப்பாக நடத்தினர்.
இயற்கை பேரிடர் சமயத்தில் செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முதலுதவி செய்யும் முறைகள், தீ விபத்து ஏற்படும்போது தீயைக் கட்டுப்படுத்துவது, காஸ் கசிவினால் ஏற்படும் தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கத்துடன் விளக்கமளித்தனர்.