தொப்பூரில் சித்த மருத்துவக் கட்டடம் திறப்பு

தொப்பூரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்த மருத்துவக் கட்டடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


தொப்பூரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்த மருத்துவக் கட்டடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், தொப்பூரில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சார்பில் கட்டப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவக் கட்டடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் 
திறந்துவைத்தார். அப்போது, எம்எல்ஏ-க்கள் எ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், இயக்குநர் சிவபிரகாசம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வ.கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், சித்த மருத்துவ அலுவலர் ப.கண்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com