சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம்

அரூர்-தருமபுரி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி அண்மையில்தொடங்கப்பட்டது.


அரூர்-தருமபுரி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி அண்மையில்
தொடங்கப்பட்டது.
அரூர்-தருமபுரி நெடுஞ்சாலை ஓரங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஜெ.கண்ணன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகள், சீரமைப்புப் பணிகளின் தரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஆர்.என். தனசேகரன், உதவி கோட்டப் பொறியாளர் என். ஜெய்சங்கர், இளநிலை பொறியாளர் ஏ. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com