பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள்முதல்வன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தருமபுரியில், அன்னை கஸ்தூரிபா சேவை சங்கம் சார்பில் வழங்கப்படும் முதல்வன் விருது பெற 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்


தருமபுரியில், அன்னை கஸ்தூரிபா சேவை சங்கம் சார்பில் வழங்கப்படும் முதல்வன் விருது பெற 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனர் தகடூர் இரா.வேணுகோபால், பொதுச் செயலர் பி.சுதாகரன் ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தருமபுரி அன்னை கஸ்தூரிபா சேவா சங்க, கவியரசு கண்ணதாசன் நற்பனி மன்றம் சார்பில் மகாத்மா காந்தி, அன்னை கஸ்தூரிபா 150-ஆவது பிறந்தநாள் விழா, கஸ்தூரிபா சேவா சங்க 50-ஆவது ஆண்டு விழா, காமராஜர் முதல்வன் விருது வழங்கும் விழா, ஆகிய முப்பெரும் விழா வருகிற அக்.6-ஆம் தேதி தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள டிஎன்சி விஜய் மஹாலில் நடைபெற உள்ளது. 
இதில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வன் விருது வழங்கப்பட உள்ளது. எனவே, இவ் விருது பெற தகுதியான மாணவர்கள் தங்களின் புகைப்படம், மதிப்பெண் விவரம் ஆகியவற்றை உடனே அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றனர். தொடர்புக்கு: 9360830519.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com