வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர்குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.


தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இண்டூர் அருகே பிக்கம்பட்டியை சேர்ந்தவர் சைலா (22). இவர் கடந்த, இரு நாள்களுக்கு முன்பு, தட்டச்சு பயிற்சி முடித்து, தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சைலாவின் கழுத்தில் இருந்த, நகையை பறித்து சென்றனர். 
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பிக்கிலியை சேர்ந்த விஜய் (26), பூதிநத்தத்தை சேர்ந்த விஜயன் (22), கொண்டம்பட்டியை சேர்ந்த அசோகன் (26) ஆகியோர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து, மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், போலீஸார் விசாரணையில் இந்த மூன்று பேரும், பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வரும் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழிக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து, அவர்களை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதன்பேரில், மூன்று பேரையும் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com