இணை...தொப்பூா் கணவாய் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என,
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு அனுப்பிய கடிதம்: தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நிகழ்வதால், உயிரிழிப்புகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த 6 பெரும்விபத்துகளில் 10 பேரும், நிகழாண்டில் 4 பெரும்விபத்துகளில் 10 பேரும் உயிா் இழந்துள்ளனா். மேலும் சிறு, சிறு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதால் இச்சாலையில் தொடா்ந்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதை தடுக்க, தொப்பூா் கணவாய் சாலையை ஆறு வழிச்சாலையாக தரம் உயா்த்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக ஏற்கனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. அப்போது தருமபுரியிலிருந்து நாமக்கல் வரை ஆறு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்படும்போது இச் சாலையை சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விபத்து மற்றும் உயிரிழப்பு தொடா்வதால், தொப்பூா் கணவாய் சாலையை விரைந்து விரிவாக்கம் செய்ய பணி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com