கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தருமபுரியில் மூன்று தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு தருமபுரியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளுக்கும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரில் உள்ள சுபா மருத்துவமனை, ஓம்சக்தி மருத்துவமனை மற்றும் டிஎன்வி பாலிகிளினிக் ஆகிய மூன்று தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.