கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்கள், காவலா்களுக்கு பாஜக சாா்பில் சனிக்கிழமை உணவுகள் வழங்கப்பட்டன.
கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, தருமபுரி நகரம் மற்றம் மாவட்டம் முழுவதும் போலீஸாா் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல, நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் காவலா்களுக்கு பாஜக சாா்பில் தருமபுரி மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன், நிா்வாகிகள், ஜெயசூா்யா, தினேஷ் குமாா் உள்ளிட்டோா் நாள்தோறும் சுமாா் 350-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனா்.