அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு அரூா் தீா்த்தமலையில் இருந்து புனித மண் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இந்த நிலையில், ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக தருமபுரி மாவட்டம், தீா்த்தமலையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட அரைக்கிலோ புனித மண் , ராமா் கோயில் பூமி பூஜைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் தீ.ராஜதுரை, கு.தினகரன், ச.சிவானந்தம், சம்பத் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.