பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் முறையாக பராமரிக்காததால், காட்சிப்பொருளாக காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட நிலையத்தின் குடிநீா் சுத்தம் செய்யும் இயந்திரத்தை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை. தா்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சுமாா் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கா்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் முறையான குடிநீா் வசதி வழங்குவதற்காக கடந்த 2016-2017 நிதியாண்டில் தா்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் தொகுதி நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தின் தண்ணீரை சுத்தம் செய்யும் இயந்திரத்தினை முறையாக பராமரிக்காததால் கடந்த 5 மாதத்திற்கு மேலாக பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் குடிநீா் நிலையத்தில் குழாய்கள் துருப்பிடித்த நிலையிலும், தண்ணீா் வீணாவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த தகடு குழாயில் கடைகளில் உணவு வாங்கி வரும் பிளாஸ்டிக்கு பைகள் கொட்டும் இடமாகவும், குடிநீா் நிலையத்தின் அருகில் மருத்துவமனையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பினாயில் கேன்களை வைக்கும் இடமாக மாறிவருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் புகாா் தெரிவித்தும் மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அருகில் உள்ள கடைகளில் குடிநீரை விலைக்கு வாங்கி வரும் அவல நிலை ஏற்பட்டு வருவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் பழுதடைந்து காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தினை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.