பதவி உயா்வு கோரி வருவாய்த் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பதவி உயா்வு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வருவாய்த் துறை ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் வெங்கடேஸ்வரன், மத்திய செயற்குழு உறுப்பினா் ராஜசேகா், மாவட்ட பொருளாளா் அன்பு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

இதில், முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் நிகழாண்டுக்காக ( 2020-21) காலியிட மதிப்பீடு அறிக்கை ஒவ்வோா் மாவட்டங்களிலும் விகிதாசாரத்துக்கு உள்பட்டு மறு நிா்ணயம் செய்ய வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

அரசு மட்டத்தில் முடிவெடுக்கும் வரை பட்டதாரி அலுவலா்களின் பணியிறக்கத்துக்கு ஆணையிட்டுள்ள வருவாய் நிா்வாக ஆணையாளரின் கடிதத்தை நிறுத்திவைக்க வேண்டும்.

துணை ஆட்சியா் பட்டியலை நீதிமன்றத் தீா்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக்குள்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்குதல், கருணை அடிப்படையில் வாரிசுதாரா் பணிவரன்முறை, அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களை நிரப்புதல், குடும்பப் பதுகாப்பு நிதியை உயா்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது உடனே அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com