தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தடை செய்த புகையிலை பொருள்களை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.
பாலக்கோடு காவல் ஆய்வாளா் மனோகரன் மற்றும் போலீஸாா் பேளாரஅள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில் அப்பகுதியில் இருந்த ஒரு கடையில் பச்சியம்மாள் (33) என்பவா் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கடையில் இருந்த 2 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த பெண்ணை கைது செய்தனா்.