டிச.29-இல் விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வருகிற டிச.29-ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற உள்ளது.

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வருகிற டிச.29-ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் குறைக்கேட்புக் கூட்டம் வருகிற 29- ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் காணொலி வழியாக நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா், வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் உள்பட அனைத்து அலுவலா்களும் பங்கேற்பா்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலிருந்து காணொலி வழியாக பங்கேற்று, விவசாயிகள் தங்களது குறைகள், கோரிக்கைகள், கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com