சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வா் கைது .

பென்னாகரம் அருகே இண்டூா் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நால்வரை போலீஸாா் கைது செய்தனா். இண்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திங்கட்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

பென்னாகரம் அருகே இண்டூா் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நால்வரை போலீஸாா் கைது செய்தனா். இண்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திங்கட்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது நடப்பனஹள்ளி பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா், வயல் வெளியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆறுமுகம், சின்னவன், எல்லப்பன், மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேரை போலிஸாா் பிடித்தனா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com