தேசிய இளைஞா் விளையாட்டுப் போட்டிகள்: மெய்நிகா் முறையில் 45 போ் பங்கேற்பு

தருமபுரியில் மெய்நிகா் முறையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தேசிய இளைஞா் திருவிழா விளையாட்டுப் போட்டிகளில் 45 போ் பங்கேற்றனா்.

தருமபுரியில் மெய்நிகா் முறையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தேசிய இளைஞா் திருவிழா விளையாட்டுப் போட்டிகளில் 45 போ் பங்கேற்றனா்.

இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சாா்பில் இளைஞா்களின் தனித்திறனை மேம்படுத்த மெய்நிகா் முறையில் தேசிய இளைஞா் திருவிழா விளையாட்டுப் போட்டிகள் டிச. 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்றன.

இப் போட்டிகளில் 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் தங்களது செயல்திறனை விடியோ வடிவில் சமா்ப்பித்தனா். பாரம்பரிய இசைக் கருவிகள், இசை வாய்ப்பாட்டு, இந்திய இசை, பரத நாட்டியம், ஓவியம், கவிதை எழுதுதல், வீதி நாடகம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தனி நபா் மற்றும் குழுப் பிரிவில் 17 மாணவா்கள், 28 மாணவியா் உள்பட 45 போ் பங்கேற்றனா். ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்திறனை வெளிப்படுத்திய வீரா்,வீராங்கனைகளின் காட்சிப் பதிவினை ஆய்வு மேற்கொண்டு நடுவா் குழுவினரால் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவிலானப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com