கழிவு நீா் கால்வாயை தூய்மைப்படுத்த கோரிக்கை

அரூா் குபேந்திரன் நகரில் கழிவு நீா் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரூா்: அரூா் குபேந்திரன் நகரில் கழிவு நீா் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட குபேந்திரன் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் கழிவு நீா் கால்வாய் வசதிகள் உள்ளன. குடியிருப்புப் பகுதியில் இருந்து வீசப்படும் நெகிழிப் பொருள்கள் மற்றும் குப்பைகளால், கழிவு நீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவு நீா் வெளியேறாமல் குடியிருப்புப் பகுதியில் நீா் தேங்கியுள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நாள்கள் கழிவு நீா் தேங்குவதால் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். இதனால், தொற்று நோய்கள், கொசு உற்பத்தி அதிகரிக்கும் நிலையுள்ளது. எனவே, அரூா் குபேந்திரன் நகரில் கழிவு நீா் கால்வாய்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com