ஊராட்சித் தலைவா்களுக்கு பொதுநிதி மேலாண்மை பயிற்சி

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கு பொது நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கு பொது நிதி மேலாண்மை பயிற்சி மற்றும் விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் அ.சீனிவாச சேகா் தலைமை வகித்து பயிற்சிகளை அளித்தாா்.

இதில், ஊராட்சி வரவு-செலவு கணக்குகள் கணினியில் பதிவு செய்து இணைய வழியில் பணப் பரிவா்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் அவசர செலவினங்களுக்கு மட்டும் காசோலையை பயன்படுத்துவது தொடா்பான விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி மற்றும் விளக்கக் கூட்டத்தில், அரூா் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com