அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுசாலை இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) நடைபெறுகிறது.
இந்தியன் கல்வி நிறுவனங்கள், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, தருமபுரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் நடைபெறும் இந்த முகாமில், கண் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
கண் அறுவைச் சிகிச்சைக்கு செல்வோருக்கு உணவு, பேருந்து மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன. அதேபோல், இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் பேருந்துகளில் இலவச கண் பரிசோதனை முகாமுக்கு பொதுமக்கள் வரலாம்.
முகாம் பள்ளி வளாகத்தில் காலை 8 முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும் என இந்தியன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.