தருமபுரியில் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி வா்த்தகா் மஹாலில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஏ. பானு சுஜாதா தலைமை வகித்துப் பேசினாா்.
முகாமில், மளிகை, உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபடுவோா், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறுவதற்கு கோரி, 225-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.
இவை பொது இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றப்பட்டு, ஆய்வுக்கு பின்பு, இணையத்தில் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் கே. நந்தகோபால், நகர மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் உத்தண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.