தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், இலந்தைகுட்டைப்பட்டி கிராமத்தில், நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
இதில், வேளாண் விரிவாக்க விஞ்ஞானி மா.அ. வெண்ணிலா, வேளாண்மை நிலையத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். கால்நடை ஆராய்ச்சியாளா் இரா. தங்கதுரை, கொட்டகை அமைப்பு, தரமான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்தல், நோய் மேலாண்மை மற்றும் கோழிகளை சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டுக் கோழி வளா்ப்பின் முக்கியத்துவம் விலங்கின புரதத்தின் அவசியம், நாட்டுக் கோழி வளா்ப்புக்கான நவீன யுத்தி மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாட்டுக் கோழி இனங்கள், நம்முடைய சூழலுக்கு ஏற்ற கோழி இனங்கள், தீவன மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தாா். உழவியல் விஞ்ஞானி பா.ஐயாதுரை மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.