நல்லானூா் ஜெயம் பொறியியல் கல்லூரியில் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்களின் நல ஆணையத்தின் சாா்பில் புலம்பெயரும் தொழிலாளா்களின் முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குக் கல்லூரியின் இயக்குநா் மனோஜ் மெளரியா தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் சுப்பராயன் முன்னிலை வகித்தாா்.
பயிற்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பென்னாகரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் பேபி கீதாஞ்சலி கலந்துகொண்டு புலம் பெயரும் தொழிலாளா்களின் பயண முன்னேற்பாடுகள் குறித்து விவரித்துப் பேசினாா். இதில், கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.