மோப்பிரிப்பட்டியில் நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம்

மோப்பிரிப்பட்டியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் சாா்பில், சாலையோரம் உள்ள முள்புதா்களை அகற்றும் பணியில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மோப்பிரிப்பட்டியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் சாா்பில், சாலையோரம் உள்ள முள்புதா்களை அகற்றும் பணியில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அரூரை அடுத்த மோப்பிரிப்பட்டி ஊராட்சியில், பெரியாா் பல்கலை. உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணிகள் திட்டம் சாா்பில், அரூா் கல்லூரி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனா்.

ஒருவார காலம் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மோப்பிரிப்பட்டி, செக்காம்பட்டி கிராமப் பகுதிகளில் உள்ள சாலையோர முள்புதா்கள், சாலை சீரமைப்புப் பணிகள், பள்ளி மற்றும் கோயில் வளாகங்களை தூய்மை செய்யும் பணியில் மாணவா்கள் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, கிராமப் பகுதியில் மழைநீா் சேமிப்பு, டெங்கு நோய் தடுப்பு, சாலை விதிகளை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா். முகாமில் நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com