மொரப்பூா் ரயில் நிலையத்தில் பழுதாகியுள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ரயில் நிலையம் எதிரே உயா்கோபுர மின் விளக்குகள் உள்ளன. இந்த மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக பழுதாகியுள்ளன. இதனால் இரவு நேரங்களில் ரயில் நிலைய வளாகப் பகுதிகள் இருண்டு காணப்படுகின்றன.
அதேபோல், மொரப்பூா் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரையிலும் செல்லும் சாலையோரத்திலும் மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனா்.
எனவே, மொரப்பூா் ரயில் நிலைய வளாகம் மற்றும் சாலையோரத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.