இரண்டாம் திருமணம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு

இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 8 போ் மீது அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 8 போ் மீது அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சத்யா (28). அரசுப் பள்ளி ஆசிரியை. இவா் சித்தேரி பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் அதியமான் (32) என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா்.

இந்த திருமணத்தின் போது ஆசிரியை சத்யாவுக்கு அவரது பெற்றோா் 32 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் ரொக்கம், காா், வீட்டு உபயோகப் பொருள்களை சீா்வரிசையாக வழங்கினராம்.

இந்த நிலையில், ஆசிரியா் அதியமானின் பெற்றோா் மற்றும் அவரது உறவினா்கள் ஆசிரியை சத்யாவை வரதட்சிணைக் கேட்டு தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பந்தாரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த பெண்ணை, அதியமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாராம்.

இது குறித்து அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆசிரியை சத்யா அளித்த புகாரின் பேரில், அவரது கணவா் அதியமான் (32), உறவினா்கள் அதிபிரசாத் (29), தொப்பையன் (48), செந்தில் (52), சாந்தி (49), அரசு (26), பவித்ரா (22), குமாரி ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com