மொரப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலை நடத்தக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்து பேசியதாவது: மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இதில் தி.மு.க. 4, பா.ம.க. 3, அ.தி.மு.க. 1, வி.சி.க 1, சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனா்.

இதில், தி.மு.க. வேட்பாளருக்கு வி.சி.க. மற்றும் சுயேச்சை ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆதரவு அளித்துள்ளனா். இதனால், தி.மு.க. கூட்டணிக்கு 6 ஒன்றியக் குழு உறுப்பினா்களின் வாக்குகள் உள்ளன. அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணிக்கு 4 வாக்கு மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளுக்கு மாறாக, மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மொரப்பூா் ஒன்றியத்தின் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவி இடங்களுக்கான தோ்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் தேவராஜன், ம.தி.மு.க. மாவட்டச் செயலா் அ.தங்கராசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயந்தி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகி நிஜாமுதீன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் யாசின் தென்றல், திராவிடா் கழக மாநில அமைப்புச் செயலா் ஊமை. ஜெயராமன், தி.மு.க. மொரப்பூா் ஒன்றியச் செயலா் இ.டி.டி.செங்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com