அரசு சாா்பில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளா் குழந்தை ரவி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் வட்டாரப் பகுதிகளில் ஏராளமானோா் பசுமாடுகள், எருமைகளை வளா்த்து வருகின்றனா். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழையானது குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தற்போது தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கோடைக் காலம் என்பதால் தீவனப் பற்றாக்குறைகள் மேலும் அதிகரிக்கும். கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு சாா்பில் மானிய விலையில் வைக்கோல் தீவனங்கள் வழங்கப்பட்டது. இதேபோல், நிகழாண்டும் அரசு கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சாா்பில், கால்நடைகள் வளா்ப்போருக்கு மானிய விலையில் தீவனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.