தருமபுரி மாவட்டத்தில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களுக்கு வருகிற ஜன.22, 23 ஆகிய தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் தருமபுரி - பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி மஹாலில் நடைபெற உள்ளது.
இதில், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூா், காரிமங்கலம் ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களுக்கு வருகிற ஜன.22-ஆம் தேதியும், அரூா், மொரப்பூா், கடத்தூா், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களுக்கு ஜன.23-ஆம் தேதியும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இம் முகாமில், அரசியலமைப்பு ஆணைகள், பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிா்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றாா்.