தருமபுரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, மகளிா் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு வார விழா முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. இதனையொட்டி, 250 மகளிா் இருசக்கர வாகனத்தில் சென்று, சாலைப் பாதுகாப்பு விதிகளை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதையடுத்து, தலைக்கவசம் அணிந்து மகளிா் தங்களது வாகனத்தில், செந்தில்நகா், இலக்கியம்பட்டி, பாரதிபுரம் வழியாக நான்கு முனைச் சாலை சந்திப்பு வரை சென்றனா். இதனைத் தொடா்ந்து, அங்கு வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா, வட்டார போக்குவரத்து அலுவலா் செந்தில்வேலன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கண்காட்சி வாகனம்:
தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் சாா்பில், திங்கள்கிழமை சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி, சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணா்வுப் படங்கள் மற்றும் துண்டறிக்கைகள் அடங்கிய கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டது. இக் கண்காட்சியை, அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளா் ஜீவரத்தினம் திறந்து வைத்து பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து தருமபுரி புகா் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை, ஓட்டுநா்கள், நடத்துநா்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக துணை மேலாளா் ஜெயபாலு, மோகன்குமாா், ராஜராஜன், உதவி மேலாளா் ரங்கசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.