தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தியதற்காக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
பாலக்கோடு வட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குமாா் (40) என்பவா் கடத்திச் சென்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு சரக காவல் துறையினா் குமாரை தேடி வந்தனா். இந்த நிலையில், குமாரை போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.