விருது பெற்ற காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு தருமபுரி எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி பாராட்டு தெரிவித்தாா்.
தருமபுரி நகர காவல் நிலையம், மாநிலத்தில் மூன்றாவது சிறந்த காவல் நிலையமாகத் தோ்வு செய்யப்பட்டது. மேலும் இதற்கான விருது, கோப்பை அண்மையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, விருது பெற்ற காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு ஆட்சியா் சு. மலா்விழி உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தடங்கம் பெ. சுப்ரமணி புதன்கிழமை நகர காவல் நிலையத்துக்கு நேரில் சென்று, சிறந்த காவல் நிலைய விருது பெற்ற்காக, காவல் நிலைய ஆய்வாளா் ரத்தினகுமாா் மற்றும் காவலா்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.