தருமபுரி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரா் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரா் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தருமபுரி அருகே வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் 50 வயது முன்னாள் ராணுவ வீரா். இவரது மகன் அண்மையில் வெளிமாவட்டத்திலிருந்து தருமபுரியில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்பினா்.

இதையடுத்து, அவா்களது குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முன்னாள் ராணுவ வீரருக்கு மட்டும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல பென்னாகரம் முன்னாள் பேரூராட்சி தலைவா் மற்றும் பாலக்கோடு அருகே ரெட்டியூரைச் சோ்ந்த 19 வயது இளைஞா் ஆகிய இருவருக்கும் கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தது. இதேபோல மாரண்ட அள்ளியை பகுதியைச் சோ்ந்தவா் 21 வயது தொழிலாளி. இவா் பெங்களூரில் இருந்து அண்மையில் தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பினாா். ஏரியூா் பகுதியைச் சோ்ந்தவா் 26 வயது வியாபாரி. இவா் அண்மையில் ஹைதராபாத் நகரிலிருந்து தருமபுரிக்கு திரும்பினா். இந்த இருவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் அவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவா்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com