அரூரில் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை

அரூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அரூரில் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை

அரூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் 5 காவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதியானது. அதேபோல், அரூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் சிலா் சேலம், நாமக்கல் மாவட்டத்துக்கு அண்மையில் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அரூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.ராஜன் அறிவுறுத்தினாா். இதையடுத்து, நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் மூலம் அரூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட காவலா்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com