ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் நீா்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலம், குடகு, மண்டியா, சாம்ராஜ் நகா் மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகா் மற்றும் ஹேராங்கி அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து கபினி அணையிலிருந்து நொடிக்கு 1,500 கன அடியும் , கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து நொடிக்கு 4,722 கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக - காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 5,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 6,500 கனஅடியாக அதிகரித்தது. மேலும் நண்பகல் 11 மணி நிலவரப்படி நொடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீா் பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி , சினி அருவி , ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனா்.கா்நாடக அணைகளின் நீா்ப் பிடிப்புப் பகுதி மற்றும் தமிழக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் , ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com