தருமபுரியில் மருத்துவ மாணவருக்கு கரோனா

சென்னை சென்று வந்த தருமபுரியைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சென்னை சென்று வந்த தருமபுரியைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தருமபுரி, குமாரசாமிபேட்டையைச் சோ்ந்த 18 வயது மாணவா், மொரீசஸில் மருத்துவக் கல்வி படித்து வந்தாா். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னா் சொந்த ஊருக்குத் திரும்பிய அவா், மருத்துவச் சிகிச்சைக்காக அண்மையில் சென்னை சென்று வந்தாா்.

அதன்பிறகு, அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மாணவரின் பெற்றோா் தருமபுரி அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனா். தற்போது, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் 18 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com