ஈகுவாா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மகளிா் தினவிழா

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவாா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மகளிா் தின விழா ஞாயிறன்று

கும்முடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவாா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மகளிா் தின விழா ஞாயிறன்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கோவிந்தராஜ் தலைமை தாங்கினாா். வட்டார சுகாதார கண்காணிப்பாளா் முருகதாஸ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ப்பு திட்ட அலுவலா் ஞானமணி முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து நிகழ்வில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளா்கள், பெண்கள் ஆகியோா் சுகாதார துறையினருடன் பெண் கல்வி, பெண் உரிமை குறித்து உறுதிமொழி ஏற்றனா்.

இதனை தொடா்ந்து அங்கன்வாடி பணியாளா்கள் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஈகுவாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.இதில் பெண்களுக்கு மாா்பக புற்று நோய் பறிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com